Full width home advertisement

Travel the world

Climb the mountains

Post Page Advertisement [Top]



தாய்ப்பாலின் மகத்துவம் நாம் அறியாததில்லை. தாய்ப்பாலில் இருக்கும் குறிப்பிட்ட தாதுக்கள் புற்றுநோய் செல்களை தாக்கி அழிக்கும் தன்மை உடையவை என்று தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
குழந்தைக்கு தாய்ப்பால் சத்துமிக்க ஆகாரம் என்பதோடு நோய் எதிர்ப்புத் தன்மை உடையது என்பதும் நாம் அறிந்ததே. தாய்ப்பாலில் இருக்கும் ஆல்பா லாக்டால்புமின் என்ற தாதுப்பொருள் புற்றுக்கட்டி களையும், புற்று செல்களையும் அழிக்கும் தன்மை கொண்டது. இதற்கு காம்லெட் என்று பெயரிட்டுள்ளனர். `ஹியூமன் ஆல்பாலேக்டால்புமின் மேடு லெத்தல் டூ டியூமர்’ என்பதன் சுருக்கம்தான் `காம்லெட்’.

ஸ்வீடன் நாட்டில் உள்ள கோதன்பர்க் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் இதை கண்டுபிடித்துள்ளனர். தாய்ப்பாலில் உள்ள தாதுப்பொருளை புற்று நோயாளிகளுக்கு கொடுத்தால் புற்று செல்கள் அழிக்கப்பட்டு சிறுநீருடன் வெளித்தள்ளப்படுகிறது. இதனால் புற்றுநோய் தீவிரம் குறைகிறது. ஆனால் புதிதாக புற்றுநோய் தாக்குதல் ஏற்படும்போது இந்த தாதுக்கள் உடலை பாதுகாப்பது இல்லை என்பதும் ஆய்வில் தெரியவந்துள்ளது.

குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால் இது தற்காலிகமாக நிகழ்ந்த கண்டுபிடிப்பாகும். தாய்ப்பாலில் பாக்டீரியா எதிர்ப்பொருள் இருக்கிறதா என்ற நோக்கில்தான் ஆய்வு நடத்தப்பட்டது. இடையில் 40 வகையான புற்று செல்களை அழிக்கும் தன்மை தாய்ப்பாலுக்கு இருப்பது கண்டறியப்பட்டது.

No comments:

Post a Comment

Bottom Ad [Post Page]